ADDED : ஆக 13, 2025 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி; மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு, தேசபக்தியை ஏற்படுத்தவும், தியாகிகளின் தியாகத்தை நினைவு கூரும் வகையிலும் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 36 பேர் துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் தர்ஷனா நாயர் தலைமையில் தேசிய கொடியை ஏந்தி பெருங்குடி வரை ஊர்வலமாக சென்றனர்.