நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை மாநகர போலீசார் சார்பில், ஆரப்பாளையம் ஹோலி பேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடந்தது.
போதைப் பொருளின் தீமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்து திலகர் திடல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி விளக்கினார். மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.
இதுசம்பந்தமாக நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியை ஜெயராணி உட்பட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

