ADDED : செப் 02, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : கேரளா தைக்கூடத்தை சேர்ந்தவர் கார்த்திக் 21. இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மண்ணாடிமங்கலத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். சமயநல்லுார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். நீதிபதி முத்துக்குமாரவேல் பிறப்பித்த உத்தரவு: கார்த்திக்கிற்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

