ADDED : நவ 20, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அருகே களிமங்கலம் தர்மலிங்கம்45. கொத்தனார். இவர் ஒரு சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தார். கருப்பாயூரணி போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி முத்துக்குமரவேல் பிறப்பித்த உத்தரவு: தர்மலிங்கத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

