ADDED : மார் 25, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மகாலிங்கம்,62. கூலித் தொழிலாளி. இவர் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். மதுரை தெற்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி முத்துக்குமாரவேல் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மகாலிங்கத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
