நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விளாங்குடியில் நேற்றுமுன்தினம் டூவீலரில் வந்த இருவர் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றனர்.
இரவில் கே.கே.நகர் பகுதி தனியார் மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்த 3 பவுன் நகை திருடப்பட்டது. அடுத்தடுத்து வழிப்பறி, திருட்டு நடந்ததால் நேற்று மாலை 56 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.