நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் ஜன., 14ல் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் மருத்துவ பரிசோதனை மையம், காளைகள் கொண்டுவரும் பாதை, வாடிவாசல் அமையும் இடம், ரோட்டின் இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வவிநாயகம் உடனிருந்தார்.

