sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : நவ 15, 2024 05:57 AM

Google News

ADDED : நவ 15, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகை, பணம் திருட்டு


கொட்டாம்பட்டி : கருங்காலக்குடி இளையபெருமாள் 74. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். குடும்பத்தினருடன் நவ.4 ல் சென்னையில் உள்ள மகளை பார்க்க சென்றவர் நேற்று வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு 12 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரிக்கிறார்.

ஆடுகள் திருட்டு


மேலுார்: சின்னகற்பூரம்பட்டி செல்வராஜ் 49, ஆடு வளர்ப்பவர். இவருடைய தோட்டத்தில் கட்டியிருந்த நான்கு ஆடுகள் திருடு போனது. மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

வழிப்பறி செய்த ஐவர் கைது


பாலமேடு: உத்திரபிரதேசத்தை சேர்ந்த நபிஸ் மற்றும் பாஜில், டூவீலரில் பாலமேடு பகுதியில் தார்ப்பாய் விற்பனை செய்தனர். எர்ரம்பட்டிக்கு விற்பனைக்காக சென்றவர்களிடம் இருந்து தார்ப்பாய், அலைபேசியை வழிப்பறி செய்த அதேபகுதி அழகர்சாமி 20, பொன் மாதவன் 27, கோபிநாத் 21, மாவீரன் 20, அழகுராஜா 26, ஆகியோரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் பாலமேடு போலீசார் கைது செய்தனர்.

புகையிலை விற்றவர் கைது


அலங்காநல்லுார்: சரந்தாங்கி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக அலங்காநல்லுரர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் சோதனை செய்து முருகேசன் 40, கடையிலிருந்து 4 கிலோ 245 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து முருகேசன் கைது செய்தனர்.

கட்டிலில் இருந்து விழுந்து பலி


பேரையூர்: காளீஸ்வரி காலனி பிரகாஷ் 44. இவர் நேற்று முன்தினம் இரவு கட்டிலில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். துாக்கத்தில் கட்டிலில் இருந்து உருண்டு விழுந்தவர் தலையில் அடிபட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us