நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: வில்லாபுரம் கர்ணன் 28. கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.
தேர்வில் தோல்வி: இளைஞர் தற்கொலை
மதுரை: அண்ணாநகர் கிருஷ்ணகுமார் மகன் அசோக்குமார் 25. துபாயில் 'உலக வர்த்தகம்' குறித்த படிப்பு படித்தார். அத்தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். மனஅழுத்தத்தில் தனிமையில் இருந்தவர், சங்கலியால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.