sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஜூலை 18, 2025 04:31 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேன் மோதி ஒருவர் பலி

கள்ளிக்குடி: பேய்குளத்தைச் சேர்ந்த அழகு சுந்தரம் மகன் பாலமுரளிகிருஷ்ணன் 20, இவர், தாத்தா சண்முகராஜாவை ஆவலசுரம்பட்டியில் விட்டுவிட்டு, டூவீலரில் வந்துள்ளார். அந்த வழியாக வந்த உறவினர் தவசிப் பெருமாளை டூவீலரில் ஏற்றிச் சென்றார். உன்னிப்பட்டி ஊருணி அருகே எதிரே வந்த மினி வேன் டூவீலரில் மோதியது. பாலமுரளிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். தவசிப்பெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

பிளஸ் 2 மாணவர் பலி

சேடப்பட்டி: முனிசாமி மகன் சின்னன் என்ற விஷால் 17. முருகன் மகன் ராமர் 17. சேடப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தனர். இருவரும் மங்கல்ரேவு உணவகத்திற்கு சென்று திரும்பினர். டூவீலரை சின்னன் என்ற விஷால் ஓட்டினார். ராமர் பின்பக்கம் அமர்ந்திருந்தார் (ஹெல்மெட் அணியவில்லை) சேடபட்டிக்கு வந்தபோது, எதிரே டூவீலரில் வந்த கே. ஆண்டிபட்டி கதிர்வேல் 26, மோதினார். இதில் ராமர் இறந்தார். சின்னன் என்ற விஷால், கதிர்வேல் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சேடப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

கொட்டாம்பட்டி: கடலுார் சகாயத்துக்கு சொந்தமான படகை கன்னியாகுமரியை சேர்ந்த 7 பேர் வேனில் ஏற்றி சொந்த ஊருக்கு சென்றனர். வேனை கன்னியாகுமரி ஜெகன் 48, ஓட்டினார். நேற்று மாலை கோட்டைப்பட்டி விலக்கருகே முன்னால் சென்ற டூவீலர் மீது மோதியதில் டிரைவர் வேனை திருப்பினார். இதில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் பயணித்த கடியாபட்டினம் ஸ்டாலின் 48, இறந்தார். சகாயம், ரொனால்டோ 45, சகாயம் ஆண்டனி 47, உள்ளிட்ட நால்வர் காயத்துடன் மேலுார், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.

--- மணல் திருடிய நால்வர் கைது

பேரையூர்: தொட்டணம்பட்டி செல்வம் 29. வி.ராமசாமிபுரம் சதுரகிரி 35. பெரியவண்டாரி முத்தரசன் 18. விருதுநகர் மாவட்டம் வத்ராப் முத்தழகன் 18, ஆகிய 4 பேர் எஸ்.மீனாட்சிபுரம் ஓடையில் மணல் திருடினர். ரோந்து சென்ற நாகையாபுரம் போலீசார் அவர்களை கைது செய்து மணல் அள்ளும் இயந்திரம், 2 டிப்பர் லாரிகள், 3 டூ வீலர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.--






      Dinamalar
      Follow us