sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்தி... மதுரை

/

போலீஸ் செய்தி... மதுரை

போலீஸ் செய்தி... மதுரை

போலீஸ் செய்தி... மதுரை


ADDED : அக் 06, 2025 04:32 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு

மதுரை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஜெமிலா 60. இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, யாகப்பா நகரில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். அவருடன் அவரது பேரன்கள் 2 பேர் சென்றனர். சகோதரர் வீடு முன் ஆட்டோவில் அமர்ந்திருந்த போது அப்பகுதியில் இருந்த பழமையான 3 மாடி கட்டடம் இடிந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஜெமிலா உயிரிழந்தார். பேரன்கள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வீட்டின் உரிமையாளர் முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் சுசீந்திரன் மீது 3 பிரிவுகளில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போதையில் தீக்குளிப்பு

மதுரை: சாத்தமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 25. பெயின்டர். இவர் அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்ததாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று உயிரிழந்தார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒருவர் பலி

பேரையூர்: பாப்பையாபுரம் சுந்தரம் மகன் செல்லப்பாண்டி 24. இவர் பேரையூரில் வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். வேலை முடித்து பேரையூரில் இருந்து டூவீலரில் சிலமலைப்பட்டி அருகே சென்றபோது நாய் குறுக்கிட்டது. நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். எஸ்.ஐ சந்தோஷ்குமார் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us