நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் யோகா மாணவர்கள் பொங்கல் விழா கொண்டாடினர். மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். அமைதி மற்றும் முழுமை வளர்ச்சி மைய இயக்குநர் வெங்கடேஸ்வரன், எழுத்தாளர் அழகர்சாமி, மாணவர் செல்வகுமார் பங்கேற்றனர்.
'பொங்கல் திருநாள் - வளத்தின் அடையாளமா, பண்பாட்டின் அடையாளமா' எனும் தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் பேராசிரியர் மாரிச்செல்வம், சத்யசாரா, பவானி ஈஸ்வரி, கிருத்திகா, சத்தியபாமா, ஆசிரியர் சரவணன் பேசினர். முதல்வர் தேவதாஸ் நடுவராக பங்கேற்றார்.