sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மண்பாண்ட தொழிலாளர் மாநில செயற்குழு

/

 மண்பாண்ட தொழிலாளர் மாநில செயற்குழு

 மண்பாண்ட தொழிலாளர் மாநில செயற்குழு

 மண்பாண்ட தொழிலாளர் மாநில செயற்குழு


ADDED : நவ 13, 2025 06:07 AM

Google News

ADDED : நவ 13, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம், தலைவர் நாராயணன் தலைமையில் நடந்தது.

பொங்கல் தொகுப்புடன் புதிய பானை, அடுப்பு வழங்க வேண்டும். மழைக்கால நிவாரண உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மண்பாண்டங்களில் சமைப்பதன் நலன் குறித்து பாடபுத்தகங்களில் குறிப்பிட வேண்டும்.

குலாலர் குலத்தலைவர்களான மாவீரன் சாலிவாகனன், திருநீலகண்ட நாயனார், மதுரை சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி, சங்ககால புலவர் வெண்ணிக்குயத்தியார், மகாகவிகள் கம்பதாசன், சர்வக்ஞர், கோரக்கும்பர் ஆகியோருக்கு அரசு சார்பில் நினைவு மண்டபம் கட்டி சிலை எழுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணைத் தலைவர் வீரையா, துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் கருப்புராஜா, பொருளாளர் மூர்த்தி, இளைஞரணி தலைவர் ராஜா, மகளிரணி தலைவி காளீஸ்வரி, மண்டலத் தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us