ADDED : ஜன 17, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சுப்ரமணியபுரம் பவர்ஹவுஸ் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஜன.18) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின்வாரிய குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
இதில் சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோயில், மாகாளிபட்டி, மஹால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரில் அல்லது மனுக்கள் மூலமாக தெரிவிக்கலாம் என, செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி தெரிவித்துள்ளார்.

