ADDED : பிப் 03, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் பேட்டையில் முறிந்து விழும் நிலையில் ஊசலாடும் மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது.
இங்குள்ள வைகை ஆற்றில் தேனுார் தடுப்பணைக்கு செல்லும் தெருவில் குடியிருப்புகள் அருகே உள்ள மின் கம்பத்தின் உச்சியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. கம்பிகள் மட்டுமே உள்ளதால் பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்காமல் எந்நேரத்திலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். மின் கம்பம் அருகே பள்ளபட்டி மெயின் ரோடு செல்கிறது. மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் அபாய கம்பத்தை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.

