ADDED : ஜூன் 08, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் அருண்குமார், நந்தினி. இவர்களது மகன்கள் பிரபாகரன், கிருத்திக்.
இருவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது தேர்முட்டி அருகே உள்ளகடை முன்பு பர்ஸை கண்டெடுத்து தந்தையின் உதவியோடு சோழவந்தான் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் மன்னாடிமங்கலம் நாகஜோதி மனைவி சித்ரா நகையை அடகு வைத்து திரும்புகையில் பர்ஸை தொலைத்தது தெரிந்தது.
அதில் இருந்த ரூ. 2810 சித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. எஸ்.ஐ., திருநாவுக்கரசு சிறுவர்களை பாராட்டினார்.