sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கார் கவிழ்ந்து தனியார் வங்கி ஊழியர் பலி

/

கார் கவிழ்ந்து தனியார் வங்கி ஊழியர் பலி

கார் கவிழ்ந்து தனியார் வங்கி ஊழியர் பலி

கார் கவிழ்ந்து தனியார் வங்கி ஊழியர் பலி


ADDED : நவ 25, 2024 04:54 AM

Google News

ADDED : நவ 25, 2024 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிக்குடி : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் செல்லும் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே ரோட்டோர தடுப்பில் கார் மோதி கவிழ்ந்ததில் தனியார் வங்கி ஊழியர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

திருமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த சிவா 24, இவரது நண்பர்கள் விஷ்ணு 24, அபூபக்கர் சித்திக் 24, ஆலங்குளத்தை சேர்ந்த அஜித்குமார் 25, ஆகிய நான்கு பேரும் தனியார் வங்கியில் மதுரையில் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு குற்றாலம் செல்ல நான்கு பேரும் முடிவு செய்துள்ளனர். விருதுநகரில் உள்ள மற்றொரு நண்பரையும் அழைத்துக் கொண்டு செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு இரவு 11:30 மணிக்கு காரில் சென்றனர். காரை சிவா ஒட்டிச் சென்றார்.

கள்ளிக்குடி ஆவல்சூரன்பட்டி சோதனை சாவடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் சிவா சம்பவ இடத்திலேயே பலியானார். விஷ்ணு, அபுபக்கர் சித்திக், அஜித் குமார் காயம் அடைந்தனர். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us