/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை முதல்வர் கோப்பை போட்டிக்கான பரிசுகள்
/
நாளை முதல்வர் கோப்பை போட்டிக்கான பரிசுகள்
ADDED : செப் 29, 2024 06:52 AM
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை தடகள, குழு விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மதுரை யாதவர் பெண்கள் கல்லுாரியில் நாளை (செப்.30) மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.
ரேஸ்கோர்ஸ், ஆயுதப்படை மைதானங்களில் செப்.10 முதல் 24 வரை பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் பங்கேற்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் விளையாட்டு சீருடையில் வரவேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.