ADDED : நவ 26, 2025 05:09 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் ஷேக்நபி துவக்கி வைத்தார். 'துணிப்பைகளை பயன்படுத்துவோம் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்' உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
புதுாரில் துவங்கி ரிசர்வ்லைனில் நிறைவுற்றது. ஆசிரியர்கள் முகமது அஜார், ஷேக் தாவூத், அப்துல் சலாம், பாசில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன், அல்ஹாஜ் முகமது ஆகியோர் ஊர்வலத்தை வழிநடத்தினர்.
