ADDED : அக் 18, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனைபடி திருப்பரங்குன்றம் பகுதியில் காச நோயால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இளைஞரணி அமைப்பாளர் விமல் வழங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணபாண்டியன், ஆறுமுகம், காச நோயாளிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சபினியாஸ், மெர்சி அன்னபூரணி, ராணி, சாமுவேல், சரவணன், குரு கலந்து கொண்டனர்.