ADDED : ஜன 10, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி: கள்ளிக்குடி தாலுகா வில்லுார் பிட் 1ல் ஜன.29ல் கலெக்டர் சங்கீதா தலைமையில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது.
இது தொடர்பாக இன்று ஜன. 10 காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை வில்லுார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்னோடி மனுக்கள் பெறப்பட உள்ளது.
இதில் கள்ளிக்குடி தாலுகா பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, குறைகளை மனுக்களாக அளிக்கும்படி தாசில்தார் சிவகுமார் அறிவித்துள்ளார்.