ADDED : மே 18, 2025 02:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலுார் செம்பூர் அய்யனார் கோயில்களில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. மூன்று நாள் திருவிழாவின் முதல் நாளான நேற்று பழையூர்பட்டி மந்தையில் உள்ள புரவிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து வெள்ளலுார் நாட்டார்கள் தலைமையில் புரவிகளை சுமந்து ஒன்றரை கி. மீ., தொலைவில் உள்ள வெள்ளலுார் மந்தைக்கு கொண்டு வரப்பட்டன.
மந்தையிலிருந்து இன்று (மே 18) மூன்று புரவிகளை கடம்பூர் அய்யனார் கோயிலுக்கும், நாளை 2 புரவிகளை புதுப்பட்டி பெரம்பூர் அய்யனார் கோயிலுக்கும், மே 20ல் இரு புரவிகளை வெள்ளலுார் செம்பூர் அய்யனார் கோயிலுக்கும் கொண்டு செல்வர்.