நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அம்பேத்காரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதுரை அவுட்போஸ்டில் உள்ள சிலைக்கு மதுரை வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து விட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதை எதிர்த்து மாலை அணிவிக்க வந்திருந்த பா.ஜ.,வினரும் கோஷமிட இருதரப்பையும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வழக்கறிஞர்களை கண்டித்து பா.ஜ.,வினர் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் சமரசம் செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.