
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா நடந்தது.
அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. 16 வகையான மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்தனர். உலக மக்கள் நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. பிரார்த்தனை, கூட்டு வழிபாடு நடந்தது.
பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன், ஐயப்ப, முருக பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

