ADDED : டிச 19, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: மூக்குச்சாலை அருகே சார் நிலை கருவூல அலுவலகம் உள்ளது. அலுவலகத்திற்குப் பின்புறம் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு மலைப்பாம்பு இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்து சாப்டூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் சாப்டூர் வனப்பகுதிக்குள் பாம்பை விட்டனர்.