ADDED : அக் 29, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன. கருமாத்துார் கிளாரட் பள்ளி மாணவர்கள் பூரணச்சந்திரன் 17 வயதிற்குட்பட்டோர் நீளம் தாண்டுதலில் 2ம் இடமும், 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் திருமலை, நீளம் தாண்டுதல், 400மீ., ஓட்டத்தில் 2 ம் இடமும் பெற்று மாநில போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் ஜேக்கப் தேவானந்த், ஆசிரியர் கதிரவேல்பாண்டியன் ஆகியோரை தலைமையாசிரியர் சூசை மாணிக்கம் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

