/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் ஜன.21ல் தெப்பத் திருவிழா
/
குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் ஜன.21ல் தெப்பத் திருவிழா
குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் ஜன.21ல் தெப்பத் திருவிழா
குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் ஜன.21ல் தெப்பத் திருவிழா
ADDED : ஜன 13, 2024 03:55 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. ஜன.,21ல் தெப்பத் திருவிழா நடக்கிறது.
நேற்று காலை திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சிவிலி நாயகர் முன்பு யாக பூஜை முடிந்து சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்களால் கொடியேற்றப்பட்டு அபிஷேகங்கள் நடந்தன.
கோயில் யானை தெய்வானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளதால், கொடியேற்றத்திற்கான கொடிப்பட்டம் யானைக்குப் பதில், பல்லக்கில் வைத்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நடைபெறும் ஜன.,21 வரை தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர்.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியாக ஜன.20ல் தை கார்த்திகையும், அன்று காலை தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியும் முடித்து, 16 கால் மண்டபம் முன்புள்ள சிறிய வைரத்தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.
ஜன.,21 காலையில்ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்தில் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும். இரவு சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி மட்டும் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹார லீலை நடைபெறும்.