
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : திருவேடகத்தில் உள்ள ஏலவார் குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோயிலில் பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா நடந்தது.
நேற்று முன்தினம் காலை மண்டகப்படி வந்த சுவாமி சமேதரருக்கு அபிஷேக ஆராதனை நடந்தன. அதை தொடர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
இரவில் வெள்ளி சப்பரத்தில் மின்னொளி அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும் வலம் வந்து வீதி உலா வந்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சேவகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.