ADDED : டிச 26, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: எழுமலை எஸ்.ஐ., விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் பேரையம்பட்டி பகுதியில் மனு விசாரணைக்கு சென்றனர்.
அப்பகுதியில் வீடு வீடாக ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி, மந்தை அருகே வேனில் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் ஓடினர்.
வேனில் கிராமப்பகுதி வீடுகளில் இருந்து வாங்கிய தலா 25 கிலோ எடை கொண்ட 36 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. தப்பி ஓடியவர்களை தேடும் பணி நடக்கிறது.

