ADDED : ஏப் 14, 2026 11:36 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி நல்லமரம் ஆஞ்சநேயர் கோவிலில் 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு தீபாதாரனை நடந்தது.
ஜோதிடர் அறிவழகன் வாக்கிய பஞ்சாங்கத்தை வாசித்து தமிழ்ப் புத்தாண்டு குரு சந்திர யோகத்தில் பிறந்துள்ளதாகவும், அனைத்து ராசியினருக்கும் பலன்கள் கூறினார். இனிப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
