sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தும்பைப்பட்டியில் மத நல்லிணக்க பொங்கல் விழா

/

தும்பைப்பட்டியில் மத நல்லிணக்க பொங்கல் விழா

தும்பைப்பட்டியில் மத நல்லிணக்க பொங்கல் விழா

தும்பைப்பட்டியில் மத நல்லிணக்க பொங்கல் விழா


ADDED : ஜன 17, 2024 07:01 AM

Google News

ADDED : ஜன 17, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : மேலுார், தும்பைப்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வீரகாளியம்மன் கோயிலில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து மதநல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடினர்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கிராமம் சார்பில் பணம் வசூலித்து முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தரகன் வகையறாவிடம் ஒப்படைத்து ஜவுளிகள் வாங்கப்பட்டது.

புதிதாக வாங்கிய ஜவுளிகள் கிராமத்து பெரியவர்கள் முன்னிலையில் பெரிய மந்தை திடலில் வைக்கப்பட்டு அனைவரும் சுவாமி கும்பிட்டனர். அதனைத் தொடர்ந்து தரகன் வகையறாவை சேர்ந்தவர்கள் புதிய ஜவுளிகளை சுமந்து கொண்டு வீரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு புதிய ஜவுளிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மன் மற்றும் கோயில் மாட்டுக்கு அணிவித்து மஞ்சு விரட்டு நடந்தது.

அதற்கு முன்பாக மதநல்லிணக்க பொங்கல் வைத்து கோயிலில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சுவாமி தரிசனம் செய்தனர். ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே மத நல்லிணக்க பொங்கல் விழா நடப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us