sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மலைமேல் தீப மண்டபத்தில் சீரமைப்பு பணி: குன்றத்தில் கார்த்திகை தீப முன்னேற்பாடுகள்

/

 மலைமேல் தீப மண்டபத்தில் சீரமைப்பு பணி: குன்றத்தில் கார்த்திகை தீப முன்னேற்பாடுகள்

 மலைமேல் தீப மண்டபத்தில் சீரமைப்பு பணி: குன்றத்தில் கார்த்திகை தீப முன்னேற்பாடுகள்

 மலைமேல் தீப மண்டபத்தில் சீரமைப்பு பணி: குன்றத்தில் கார்த்திகை தீப முன்னேற்பாடுகள்


ADDED : நவ 27, 2025 05:35 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படும் மண்டபத்தில் இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணியும், சீரமைப்பு பணிகளும் நடக்கிறது.

உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தாமிர கொப்பரை வைத்து கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அந்த மண்டபத்தின் மேல்பகுதிக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் இரும்பு கைப்பிடிகளும், மண்டபத்தில் சேதம் அடைந்த பகுதிகள் சீரமைப்பு பணிகளும், சேதமடைந்த பீடம் அகற்றப்பட்டு புதிதாக பீடமும் கட்டப்பட்டுள்ளது.

தீப பீடத்தை சுற்றி 2 அடி அகலத்தில் இரும்பு பிளாட்பாரம், 3 அடி உயரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தின் முன்பு, கீழ் பகுதி பா றைகளிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. மலை அடிவாரத்தில் இருந்து உச்சிப்பிள்ளை யார் மண்டபம் வரை செடி, கொடி அகற்றும் பணி நடக்கிறது. பணி நிறைவடைந்ததும் தீப மண்டபத்தில் சுண்ணாம்பு, காவி அடிக்கும் பணி துவங்கும்.

தீபம் ஏற்றும் மண்டபத்தில் இதுவரை சவுக்கு மற்றும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வந்தது. தீபம் ஏற்றியபின்பு காற்றில் நெருப்பு பரவி பல நேரம் மூங்கில்கள் சேதம் அடைந்துள்ளன. அதனால் இந்தாண்டு இரும்பால் அமைக்கப்பட்டுள்ளது என அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us