sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மல்லப்புரம்- - மயிலாடும்பாறை ரோடு பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

/

 மல்லப்புரம்- - மயிலாடும்பாறை ரோடு பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

 மல்லப்புரம்- - மயிலாடும்பாறை ரோடு பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

 மல்லப்புரம்- - மயிலாடும்பாறை ரோடு பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை


ADDED : நவ 22, 2025 04:30 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: எழுமலை அருகே மதுரை- -- தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் - மயிலாடும்பாறை ரோடு 8 கி.மீ., நீளமான மலைப்பாதையாக உள்ளது. இதில் போக்குவரத்து அனுமதிப்பதன் மூலம் 30 கி.மீ., துாரமும், நேரமும் குறையும். வனத்துறை அனுமதி கிடைக்காமல் பொது போக்குவரத்துக்கு திறக்கப்படவில்லை. லோடு வேன்கள், டூவீலரில் அனுமதியின்றி போக்குவரத்து நடந்தது. சாம்பல்நிற அணில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வரும் இந்த வனப்பகுதியை சமீபத்தில் புலிகள் சரணாலயமாகவும் அறிவித்துள்ளனர்.

இதனால் சிறிய ரக வாகனங்களும் செல்ல கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வனத்துறையினர், ரோட்டை சீரமைக்கும் பணிகளையும் நிறுத்திக் கொண்டனர். பராமரிப்பின்றி ரோடு பள்ளமும், மேடுமாக மாறியுள்ளது. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து சிறிய வாகனங்களில் விவசாய பொருட்களுடன் வரும் விவசாயிகளும், மாணவர்களும் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டை சீரமைத்து பொது போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் உசிலம்பட்டி சப்கலெக்டர் உட்கர்ஷ்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us