ADDED : அக் 01, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பொன்மேனி எம்.எம்.நகர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம் சங்கத் தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் நாகராஜ், பொருளாளர் பாண்டியன், துணைத் தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தனர்.
குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டிய ரோடுகளை சரி செய்ய மாநகராட்சியை வலியுறுத்துதல், ஒவ்வொரு மாதமும் மின் கணக்கெடுப்பு நடத்த அரசை வலியுறுத்துதல், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி காளவாசல் பஸ் ஸ்டாப்பை ஆய்வு செய்து சிக்னலில் பயணிகளை இறக்கி விடுவதை தடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.