/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் முனைவோர் உருவாக்க தீர்மானம்
/
தொழில் முனைவோர் உருவாக்க தீர்மானம்
ADDED : ஜன 08, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : அலங்காநல்லுாரில் ஆதித்தமிழர் ஜனநாயக தொழிலாளர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் பேரவைக் கூட்டம் நடந்தது. தலைவர் முத்துராணி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் மகாலட்சுமி வரவேற்றார். ஆலோசகர் சூரியா தொகுத்து வழங்கினார். பாறைப்பத்தி கிளைத் தலைவர் அழகேஸ்வரி முன்னிலை வகித்தார். செயலாளர் பிரேமா ஆண்டறிக்கை வாசித்தார்.
பொருளாளர் விமலா நிதியறிக்கை வாசித்தார். தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் பிரியா, பொருளாளர் அழகுராணி பேசினர். துணைத் தலைவர் பஞ்சவர்ணம் நன்றி கூறினார். 2025ல் ஆயிரம் பேரை சேர்க்க வேண்டும். தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.