ADDED : அக் 04, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகைதீன் அப்துல் காதர், ரகுபதி, ஜெயபாஸ்கர், சுரேஷ் தலைமை வகித்து கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
மாவட்டத் தலைவர் கோபி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு உயர் சங்கத்தின் மாநில செயலாளர் நீதி ராஜா பங்கேற்றனர். மத்திய செயற்குழு உறுப்பினர் ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார் நன்றி கூறினர்.