ADDED : ஜன 24, 2025 04:43 AM
அ நிறம் | அளவு
கள்ளிக்குடி: கள்ளிக்குடி தாலுகாவில் அக்டோபர், நவம்பரில் 712 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
பருவமழை தாமதமான காரணத்தால் நடவு பணிகளும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டது. நெற்பயிர் பூ மற்றும் கதிர் பிடிக்கும் பருவத்தில் தொடர் மழை, குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக பயிர்களில் குலை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
கள்ளிக்குடி வேளாண் உதவி இயக்குனர் சந்திரலேகா தலைமையில் அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த நோய் தாக்குதல் காரணமாக வில்லுார், உவரி, தென்னமநல்லுார், சித்துார், கள்ளிக்குடி பிட் 2, பகுதிகளில் மொத்தம் 70 சதவீதம் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு கேட்டு உள்ளனர்.
