நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கோட்டைப்பட்டியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகிக்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் சரி செய்யவில்லை.
ஆத்திரமுற்ற மக்கள் சென்னை நான்கு வழிச்சாலையில் 10 நிமிடம் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதித்தது. கொட்டாம்பட்டி போலீசார் ஊராட்சி செயலரிடம் பேசி விரைந்து தண்ணீர் வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.