ADDED : அக் 22, 2025 08:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் தெருக்களின் பள்ளங்களில் மழைநீர் தேங்கி டூவீலர்களில் செல்வோர் உட்பட பலரும் அவதிப்படுகின்றனர்.
திருநகரில் பஸ் செல்லும் மெயின் ரோடு சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. மற்ற ரோடுகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாதவை.
இவை அனைத்தும் சேதமடைந்து பள்ளங்களாக உள்ளன.
சில நாட்களாக பெய்து வரும் மழையால் ரோடுகள் மேலும் சேதமடைந்து பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கிறது.
டூவீலரில் செல்வோர் அப்பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். ரோடு பள்ளங்களை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.