ADDED : ஜன 14, 2024 03:45 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான், : மேலக்கால் ஊராட்சி கீழமட்டையான் தெற்கு தெருவில் கழிவுநீர் வாய்க்கால் இல்லை. வீடுகளுக்குள் கழிவுநீர் சென்றது. குடிநீர் வசதியும் இல்லை.
அடிப்படை வசதிகளை செய்து தராத ஊரட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் 30 பேர் மேலக்கால், விக்கிரமங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காடுபட்டி போலீசார் பேச்சுவார்த்தைக்குப்பின் கலைந்து சென்றனர்.
