ADDED : ஏப் 16, 2026 10:35 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி திருமங்கலம் ரோடு செம்பட்டி பகுதியில் அலெக்ஸ்பாண்டியன் தலைமையில் தேர்தல் பறக்கும்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த காரில் உசிலம்பட்டி கீழப்புதுார் ரஞ்சித்குமார் 38, என்பவர் வந்தார். சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்து அரசு கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.
