ADDED : ஜன 17, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உலக மரபு தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை, கலைபண்பாட்டு துறை சார்பில் கிராமியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
இரண்டு தினங்கள் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் நாளான நேற்று கிராமியக் கலைஞர் மலைச்சாமி குழுவினரின் கரகாட்டம், மயிலாட்டம், மரம் ஆட்டம், மாடாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கரகாட்டத்தின் பல்வேறு நிலைகளில் நடனம் ஆடினார் கரகாட்ட கலைஞர் மாடசாமி. இன்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.