sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துாய்மை பணியாளர் போராட்டம் வாபஸ்

/

துாய்மை பணியாளர் போராட்டம் வாபஸ்

துாய்மை பணியாளர் போராட்டம் வாபஸ்

துாய்மை பணியாளர் போராட்டம் வாபஸ்

1


ADDED : டிச 17, 2024 04:15 AM

Google News

ADDED : டிச 17, 2024 04:15 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கமிஷனர் தினேஷ்குமார் பேசியதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து துாய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசு உத்தரவுப்படி தினம் ரூ.754 சம்பளம், போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.,சங்க துாய்மை பணியாளர்கள் காலை 8:00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம்,பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

அப்போது எம்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், தினக்கூலியாக ரூ.754 வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் விவகாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் நாடகமாடுகின்றன. எதுவும் செய்யவில்லை என்றார்.

இதையடுத்து சங்க நிர்வாகிகளிடம் கமிஷனர் தினேஷ்குமார் பேச்சு நடத்தினார். அப்போது 'சம்பள உயர்வு, போனஸ் நிர்ணயம்பிரச்னை தொடர்பாக ஒருவாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று மதியம் 3:30 மணிக்கு உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சு வார்த்தையில் நகர்நல அலுவலர் இந்திரா, உதவிநகர்நல அலுவலர் அபி ேஷக் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us