ADDED : அக் 26, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் வடகரை ஊராட்சிக்குட்பட்ட பொற்காலநகரில் சில நாட்களாக பெய்த மழையால் ரோடுகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.
இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று சேறும் சகதியுமாக இருந்த ரோட்டில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

