ADDED : டிச 23, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ராமகிருஷ்ணா மடத்தில் அன்னை சாரதா தேவியின் ஜெயந்தி விழா நடந்தது.
மடத்தின் தலைவர் சுவாமி நித்யதீபானந்தர் ஆசியுரையில், ''பெண்மையின் பூரணத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக சாரதா தேவியின் வாழ்வு அமைந்தது. பெண்மையின் மகத்துவம் தாய்மையில் நிறைவு பெறுகிறது. தன் குழந்தைகளை மட்டுமல்லாது உலகில் உள்ள அனைவரையும் குழந்தைகளாக பாவிப்பதே உண்மையான தாய்மை.
பெண்மையின் உண்மையான உயர்வும் அதுவே. நம் வாழ்வில் அமைதி வேண்டும் எனில் பிறரின் குற்றத்தை பார்க்காமல் அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

