ADDED : ஏப் 05, 2026 10:47 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவிற்கு மாநகராட்சி கல்விப்பிரிவு மேற்பார்வையாளர் தானேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார கல்வி மேற்பார்வையாளர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ வரவேற்றார். திறனாய்வுத் தேர்வு, கலைத்திருவிழா உட்பட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் கர்ணன் பரிசு வழங்கினார்.
ஆசிரியர்கள் கண்ணன், ஜெயந்தி, ரீட்டாநித்யா, அனிதா, புஷ்பா, விஜயலட்சுமி, டிராவல்ஸ் உரிமையாளர் சதீஷ்கண்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவர் ஜமால் நன்றி கூறினார்.
