நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார். பி.இ.ஓ.,க்கள் மோசஸ்பெஞ்சமின், பாண்டியன் தலைமை வகித்தனர்.
வட்டார மேற்பார்வையாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சத்யா பேசினார். மாணவர்களுக்கு குருசாமி பரிசு வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சிகளை காந்திமதி தொகுத்து வழங்கினார். செந்தில்கணேஷ் நன்றி கூறினார்.

