நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் புனிதகிளாரட் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
ஆசிரியர் ஜீவன் வரவேற்றார். தலைமையாசிரியர் சூசைமாணிக்கம், பொருளாளர் செல்வமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் இணைந்து புதுமையான அறிவியல் மாதிரிகள் செய்து விளக்கமளித்தனர். ஆசிரியை கரோலினா நன்றி கூறினார். ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். என்.எஸ்.எஸ்., பசுமை பாதுகாப்பு குழுவினர் சார்பாக மரக்கன்றுகள் நட்டனர்.

