நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார், எஸ்.ஐ., முருகேசன், போலீசார் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் குறித்து சோதனை செய்தனர்.
இதில் வீர நாயக்கர் தெரு ராஜேந்திரன் 70, கடையில் இருந்து தடை செய்த புகையிலை பொருட்கள் 500 கிராம், ரிசபம் பகுதியில் ராணி கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 750 கிராம் புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இக்கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.

