/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பறிமுதல் வாகனங்கள் நவ.27 ல் ஏலம்
/
பறிமுதல் வாகனங்கள் நவ.27 ல் ஏலம்
ADDED : நவ 19, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகரில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 17 வாகனங்கள் நவ.27 காலை 11:00 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது. விரும்புவோர் வாகனங்களை பார்வையிட்டு, டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரத்தை நவ.25க்குள் நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும்.
அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

